கவிதை தொகுப்பு – 1 – சௌம்யா
மேகம் மனதில் இடியும் மின்னல்களும் மேகத்தை போல் மேகம் மனமிரங்கி மழை பெய்து குளிர்வித்தது மண்ணையும் மனதையும் வானம் வஞ்சனையின்றி வர்ணஜாலம் காட்டும் வானம் இந்த வஞ்சியின் நெஞ்சத்தைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது முரண் மாலை நேர உடற்பயிற்சி நடைபாதையில் பாதங்கள் நடந்தன… என் மனதில் எண்ணங்கள் ஓடின… கவிதை *க*ண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் *வி*னோத எண்ணங்களையும் *தை*ப்பதோ க வி தை? மயக்கம் மயங்கியது மனம் தேன் பாயும் இசையிற்கா தேன் சிந்தும் மலரின் மணத்திற்கா? அழகி உன்னழகைக்கண்டு வெட்கத்தில் முகம் மூட வெண்மேகத்திரையில்லை வெண்ணிலாவின் வருத்தம் வேகத்தடை மழை மிதிவண்டி மனப்போராட்டம் மழையில்